நீலகிரியில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க "உங்களின் சேவை" அறிமுகம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க உங்களின் சேவை என்ற வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழி முகவரி:

www.facebook.com/collector Nilgiris

www.twitter.com/collrnlg

மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...